பெரியார் உருவம் பொறித்த “செங்கோலை” கர்நாடக முதல்வர் சித்தராமையா பெற மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு கடந்த மே 28ம் தேதி திறக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவின்போது தமிழ்நாட்டைச் சார்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்று தமிழில் தேவாரம் பாடி பூஜைகள் செய்து நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்காக செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மதுரையைச் சார்ந்த மக்கள் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் பெரியாரின் உருவம் பொறித்த செங்கோலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு வழங்க உள்ளனர். இந்த செங்கோலில் தங்க முலாம் பூசப்பட்ட பெரியாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் சமூக நீதிப் பேரவையின் தலைவர் மனோகரன் ஆகியோர் சனிக்கிழமை மாலை பெங்களூரில் கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் சித்தராமையாவை சந்தித்தனர். மேலும் கர்நாடக முதல்வரிடம் பெரியாரின் செங்கோலை வழங்கி ஜனநாயகத்தையும் , சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அப்போது கா்நாடகத்தில் சமூகநீதி ஆட்சியை நிலைநிறுத்த வலியுறுத்தி அவருக்கு பெரியாா் முகம் பொறித்த தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க முயன்றனா். இதை சற்றும் எதிா்பாா்க்காத முதல்வா் சித்தராமையா செங்கோலைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டாா்.
இது குறித்து மக்கள் சமூக நீதி பேரவை நிர்வாகிகளிடம் முதல்வர் சித்தராமையா அதற்கான காரணத்தையும் தெரிவித்தார். ‘‘ஜனநாயக மரபுக்கு எதிராக, மன்னர்களின் மரபைப் போற்றும் வகையில் செங்கோல் கலாசாரம் இருக்கிறது. அதனைத் தான் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க சார்பில் பிரதமர் வைத்தார். அதனை அப்போதே காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இதனால், இந்தச் செங்கோலை நான் வாங்கிக்கொள்ள வாங்க விரும்பவில்லை. எனக்கு பெரியாரின் படமே போதும்’’ என தெரிவித்தார்.