இவர் தான் ட்விட்டரின் புதிய CEO? யார் இந்த லிண்டா யாக்காரினோ? – எலான் மஸ்க்கின் புதிய திட்டம்…

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி என என்பிசி யுனிவர்சல்-ன் விளம்பரப் பிரிவு தலைவரான லிண்டா யாக்காரினோவை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்,…

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி என என்பிசி யுனிவர்சல்-ன் விளம்பரப் பிரிவு தலைவரான லிண்டா யாக்காரினோவை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ட்விட்டர் பயனாளர்களின் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கை தொடர்ந்து பெற இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்த எலான் மஸ்க், கட்டணம் செலுத்தாத பயனர்களின் அந்த ப்ளூ டிக் குறியீடு  அகற்றப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் அறிக்கையின் படி, பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவை ரத்து செய்துள்ளனர். ட்விட்டரில் ஆரம்பத்தில் 1,50,000 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இருந்தனர், ஆனால் இப்போது ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 68,157 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது 80,000க்கும் அதிகமான பயனர்கள் தங்கள் சந்தாவை ரத்து செய்துள்ளனர்.

ட்விட்டர் ப்ளூ டிக் பெற  $8 அல்லது $11 என்ற கட்டனத்தை நியாயப்படுத்த இந்த சேவை அதன் சந்தாதாரர்களுக்கு போதுமான மதிப்பை வழங்கவில்லை. இது  பயனர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என காரணமாக கூறப்படுகிறது.

ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் போராடி வருகிறது. ட்விட்டர் ப்ளூ டிக்கை பயனர்களுக்கு வெற்றிகரமான சந்தா சேவையாக மாற்ற விரும்பினால், ட்விட்டர் பல அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என் இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ட்விட்டருக்கு புதிய சிஇஓ-வை நியமித்துள்ளதாகவும் அவர், 6 வாரங்களில் பணியை தொடங்குவார் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ட்விட்டரின் நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓ ஆக தனது பங்களிப்பு மாறும் என கூறியுள்ளார்.

https://twitter.com/elonmusk/status/1656748197308674048?s=20

அதன்படி, என்பிசி யுனிவர்சலின் விளம்பரப் பிரிவின் தலைவரான லிண்டா யாக்காரினோ அடுத்த ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

யாக்காரினோ 2011 முதல் NBC யுனிவர்சலில் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது நிர்வாக துணைத் தலைவராக இருந்து விளம்பர விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் கையகப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளை கவனித்து கொள்கிறார். இதற்கு முன், கேபிள் பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் விளம்பர விற்பனைப் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.