சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வரவேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு தினத்தை ஒட்டி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள உள்ள அவரது மணிமண்டபத்திற்கு அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “செப்டம்பர் 1ஆம் தேதி பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும்போது அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் பன்னீர் செல்வத்திற்கு பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிப்போம். சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓ பன்னீர்செல்வம் மக்கள் மன்றத்திலும் வெற்றி பெறுவார்” தெரிவித்தார்.
உண்மையான கட்சி உண்மையான அதிமுக ஓ பன்னீர்செல்வம் தலைமையில் தான் இருக்கிறது என்று தெரிவித்த அவர், “ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எதிரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார். என்றும் தொண்டர்களின் நலனுக்காகவே ஒவ்வொரு நகர்வையும் ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார்” என்றும் தெரிவித்தார்.
எல்லோரும் ஒன்று சேர்வோம் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் விருப்பம் என்று கூறிய அவர், “அதனால் தான் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார். சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவரும் இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தையே பன்னீர்செல்வம் வெளிப்படுத்தி இருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.