மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடியில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ”மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் அன்று மழை பெய்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, நேற்று முன்தினம் அதே இடத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக 6 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளியில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. 1000 ரூபாயில் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை மற்றும் நின்று கொண்டே பார்ப்பதற்கு பல பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடந்த சம்பவங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடியில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக அவரது மகள் கதீஜா ரகுமான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100% காரணம். ஆயினும் ஏ.ஆர்.ரகுமான் அதற்காக முழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
🙏🙏🙏 pic.twitter.com/b4QPvMCXWf
— Khatija Rahman (@RahmanKhatija) September 11, 2023
ஏ.ஆர்.ரகுமான், 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், 2016-ம் ஆண்டு சென்னை மதுரை கோவை மாவட்டங்களில் நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சி நடத்தினார்.
கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018-ம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவினார்.
2020-ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவினார்.
2022-ம் ஆண்டு திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தினார். அவர் குறித்து அவதூறாக பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.