தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில், இன்று நடைபெற்ற மாசித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கே மாசித் திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல், மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் கோயில் மாசித் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று உற்சவபெருமாள் ஸ்ரீதேவி – பூதேவிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயில் முன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசிமகா திருத்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
அண்மைச் செய்தி: அமெரிக்கர்களை குறிவைத்தால் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி – ஜோ பைடன்
தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த 8ஆம் தேதி மாசித் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.