சென்னையின் மிக முக்கிய வர்த்தக மையமாக உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது.
காலை, மாலை, இரவு என முப்பொழுதும் பரபரப்பாகவும் வேகமாகவும் இயங்கி கொண்டிருக்கும் சந்தை என்றால், அது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைதான். 295 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சந்தை எனும் பெருமையுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் கோயம்பேடு காய்கறி சந்தை சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல பெருமைகள் கொண்ட கோயம்பேடு காய்கறி சந்தையை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், தங்களுக்கு கழிப்பிடம், குடிநீர், மருத்துவ சேவை உள்ளிட்ட எந்தவித அடிப்படை சேவைகளையும் முழுமையாக செய்து கொடுக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, இரவு முழுவதும் கடும் உடலுழைப்பை செலுத்தும் தொழிலாளர்கள், நிம்மதியாக தூங்க ஒரு ஒய்வறை கூட இல்லை என கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
அண்மைச் செய்தி: சாலை தடுப்பில் கார் மோதியதில் மூவர் உயிரிழப்பு
மேலும், தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நடமாடும் இந்த சந்தையில் உள்ள 91 கழிப்பிடங்களில் கிட்டதட்ட 30 கழிப்பிடங்கள் பூட்டி கிடப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். கோடை காலமான தற்போது சென்னையில் கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், கடுமையான உடல் உழைப்பை செலுத்தும் சுமை தூக்கும் தொழிலாளிகளின் தாகம் தீர்க்க போதிய குடிநீர் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அதேநேரம், தொழிலாளர்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் படிப்படையாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக, கோயம்பேடி சந்தையை நிர்வகிக்கும் எம்.எம்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.