தலைமுடியில் புகுந்துகொண்டு வெளியே வர மறுத்து அட்டகாசம் செய்த பாம்பின் வீடியோவை இளைஞர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
நம்மில் பலர் வீடுகளில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வளர்த்து வருகிறோம். அவை வீடுகளில் சுற்றி வந்து ஆட்டம் போடுவதை காணும் குழந்தை வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். சில நேரங்களில் குழந்தைகள் செல்லப்பிராணிகளுடன் விளையாடி மகிழ்வதை காணும் போது ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
அயல்நாடுகளில் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளை கூட வளர்த்து வருகின்றனர். அவைகளுடன் கொஞ்சிய விளையாடும் காட்சிகளை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர் பதிவிட்டுள்ளார். ஆனால் ஒரு வித்தியாசம். அந்த வீடியோவை பார்த்து அச்சமடைந்த பலர் பாதியிலேயே அடுத்த வீடியோவிற்கு மாறுகின்றனர். அப்படி என்ன வீடியோ அது.
டெவின் என்ற இளைஞர், தலைமுடியில் புகுந்து கொண்டு வெளியே வர அடம்பிடிக்கும் தனது செல்லப்பிராணியான குட்டிப்பாம்பை பிடிக்க முயலும் வீயோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் பார்க்க அச்சப்பட்டாலும் இன்ஸ்டாவில் ஏராளமான லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.