காங்கிரஸ் விரும்பினால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்தே 2024 தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று மேற்கு வங்க முதலமைசர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்கு பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து 2024ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஏற்கனவே பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அந்த மாநிலத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பஞ்சாப் மட்டுமல்லாது 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மாபெரும் சரிவையே சந்தித்துள்ளது. காங்கிரஸ் ஆண்ட மாநிலத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சி புதிதாக ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் 5 மாநில தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, காங்கிரஸ் விரும்பினால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்தே 2024 தேர்தலை எதிர்கொள்ளலாம். இப்போதைக்கு ஆக்ரோஷ்மாக இருக்க வேண்டாம். உறுதியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “2022 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலின் விதியை தீர்மாணிக்கும் என்பது நடைமுறைக்கு பொருந்தாதது. 4 மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி அவர்களுக்கு பெரும் இழப்பாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, மக்களின் தீர்ப்பை ஏற்பதாக தெரிவித்திருந்தார்.