சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலார் வாழ்ந்த மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் சித்தி விளாகம், சத்யஞான சபை ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் வடலூரில் நடைபெற்ற வள்ளாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் தான் வள்ளலார். இந்திய பண்பாட்டில் சிறு தெய்வ, பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை.
ஆனால் வெளியிலிருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்சினை உருவானது.
கார்ல் மார்க்ஸ் என்ற அறிஞர் 1852ல் இந்தியாவை பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் சமூக கட்டமைப்பு இருக்கக் கூடாது அதை குலைத்து விட வேண்டும் எனவும், இந்தியர்களுக்கு ஆற்றல், அறிவு கிடையாது. எனவே அவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும், கீழாக நாகரிகத்தை அழிக்க வேண்டும் எனவும் எழுதியுள்ளார்.
தொடர்ந்து நமது நாட்டின் பிரதமர் பேசுவதை உலக தலைவர்கள் எதிர்பார்த்தும், கவனித்துக் கொண்டுள்ளனர். இந்தியா வல்லரசாகி உலகத்தின் தலைமையை ஏற்கும். அவ்வாறாக வளர்ச்சிப் பாதையை செல்லும் போது “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் வார்த்தையை ஏற்போம்.” என ஆளுநர் குறிப்பிட்டார்.