“காந்தாரா” 2ம் பாகம் படப்பிடிப்பு குறித்த தகவலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

உலகளவில் பெருவெற்றி பெற்ற “காந்தாரா” 2ம் பாகத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கும் என தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘காந்தாரா’.…

உலகளவில் பெருவெற்றி பெற்ற “காந்தாரா” 2ம் பாகத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கும் என தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800களில் தொடங்கும் இக்கதை நிலம் மற்றும் நிலம் சார்ந்த மரபையும், பின்னணியையும் எடுத்து கூறுகிறது. முன்னோர்களின் மரபையும், இயற்கையும் பாதுகாக்க வேண்டும் என்பதே படத்தின் மையக்கருவாகும்.

கன்னட மொழியில் ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் கன்னட சினிமாவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி,மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும் என ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது காந்தாரா – 2 படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தாரா முதல் பாகத்தின் முன்னோடியாக காந்தாரா 2 ம் பாகம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.