தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வரும் தங்கம் விலை!

சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற…

சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.

ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.  அந்த வகையில்,  நேற்று சவரன் ரூ.53,360-க்கும்,  ஒரு கிராம் ரூ. 6,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ. 6,705-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.