30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

6:45க்கு குடும்பத்தினருடன் போனில் பேசிய நபர் – 7மணிக்கு நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த சோகம்..!!

ஒடிசா ரயில் விபத்துல் மாலை 6:45க்கு குடும்பத்தினருடன் தொலைபேசியில்  பேசிய நபர்  மாலை 7மணிக்கு நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி  மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி  மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில்   288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த ரயில் விபத்தின் போது ரயிலில் பயணித்த  மேற்கு வங்க மாநிலத்தின்  ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாகர் கேரியா என்பவர்  தனது பகுதியைச் சேர்ந்த 13 பேருடன் பெங்களூருலிருந்து யஷ்வந்த்பூர்- ஹவுரா ரெயிலில் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்.

அவர் சரியாக கடந்த 2ம் தேதி  மாலை 6.45 மணிக்கு ரயிலில் இருந்தபடியே   தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.  இந்த நிலையில் 7மணிக்கு ரயில் விபத்து நடந்துள்ளது.  இந்த விபத்தில் சிக்கி சாகர் கேரியா உயிரிழந்துள்ளார். அவருடன் வந்த 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 11 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அதுகுறித்து விசாரிப்பதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து ஒரு குழு ஒடிசாவுக்கு விரைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading