ஒடிசா ரயில் விபத்துல் மாலை 6:45க்கு குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிய நபர் மாலை 7மணிக்கு நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த ரயில் விபத்தின் போது ரயிலில் பயணித்த மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாகர் கேரியா என்பவர் தனது பகுதியைச் சேர்ந்த 13 பேருடன் பெங்களூருலிருந்து யஷ்வந்த்பூர்- ஹவுரா ரெயிலில் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்.
அவர் சரியாக கடந்த 2ம் தேதி மாலை 6.45 மணிக்கு ரயிலில் இருந்தபடியே தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த நிலையில் 7மணிக்கு ரயில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி சாகர் கேரியா உயிரிழந்துள்ளார். அவருடன் வந்த 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 11 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அதுகுறித்து விசாரிப்பதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து ஒரு குழு ஒடிசாவுக்கு விரைந்துள்ளது.