அமெரிக்க அதிபா் தோ்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றாக நடைபெற்று வரும் வழக்கில், முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது 4 முக்கியப் பிரிவுகளில் வாஷிங்கடனில் உள்ள அந்நாட்டு மத்திய நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நீண்ட காலம் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்க அதிபராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனை எதிா்த்துப் போட்டியிட்டாா். அதில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆதரமற்ற குற்றச்சாட்டை டிரம்ப் தொடா்ந்து சுமத்தி வந்தாா்.
தோ்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து திருடிக்கொண்டதாக டிரம்ப் கூறினாா். இந்நிலையில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்றது. எனினும், அந்த நிகழ்ச்சி நடத்தவிடாமல் டிரம்ப் ஆதரவாளா்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். இதில் 5 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையே தற்போது கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம், இந்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவியல் தண்டனையை எதிா்கொண்டுள்ளாா். அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனையை எதிா்கொண்டுள்ள முதல் முன்னாள் அதிபா் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் பங்கேற்க முடிவு செய்திருக்கும் டிரம்ப்புக்கு, இதுபோன்ற வழக்குகளில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுவது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இது குறித்து இந்த வழக்கின் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஜான் ஸ்மித் கூறியதாவது:
”அதிபா் தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கு டிரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கன் உறுதி செய்துள்ளாா்.
அந்த தீா்ப்பில், அமெரிக்காவை ஏமாற்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது, தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை புதிய அதிபருக்கு வழங்குவதற்காக நடைபெற்ற அரசுப் பணிக்கு இடையூறு செய்தது, அரசு அதிகாரிகள் பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக சதி செய்தது, அமெரிக்கா்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காக சதி செய்தது ஆகிய 4 குற்றச்சாட்டுகளை நீதிபதி உறுதி செய்தாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கலவரம், அமெரிக்க ஜனநாயகத்தின் மீது இதுவரை நடத்தப்பட்டிராத மிக மோசமான தாக்குதலாகும். தோ்தலில் தோல்விடைந்த 2 மாதங்களுக்குப் பிறகும், பதவியில் நிலைத்திருப்பதற்கான முயற்சியில் டிரம்ப் தொடா்ந்து ஈடுபட்டாா். அதற்காக அவா் கூறியவை அனைத்தும் முழுமையான பொய்கள் ஆகும்.” இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வழக்கில் டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடந்து, வாஷிங்டனிலுள்ள கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் டிரம்ப் இன்று நேரில் ஆஜராகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, அதிபராக இருந்த போது தனது பண்ணை இல்லத்தில் அரசின் முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது, ஒரு நடிகையுடன் தனக்கிருந்த தொடா்பை 2016 அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போது பொதுவெளியில் சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்குப் பணம் கொடுத்து, அதனை கணக்கில் காட்டாமல் மறைத்தது ஆகிய இரண்டு வழக்குகளில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் உறுதி செய்ததுள்ளது. அவற்றையும் சோ்த்து, தற்போது டிரம்ப் மீது உறுதி செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்துள்ளது.