30.7 C
Chennai
May 12, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை வெளிக்கொண்டு வர வேண்டும் – கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்ள உள்ளதாக அக்கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்றார். தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக மற்றும் ஓ‌.பி.எஸ் அணியை சேர்ந்த நகர், ஒன்றியம் பேரூர், சார்பு அணி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் வெளிக்கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் இந்த வழக்கு மக்கள் போராட்டமாக வெடிக்கும். மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading