பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து பம்மலில் ஆத்மி கட்சி
கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. உத்ரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் இருக்கிறது. கோவாவில் இழுபரியாக இருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் இருக்கிறது. காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி புரிந்து வந்த நிலையில் இந்த முறை பஞ்சாப்பில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை வெற்றி கொண்டது. அதற்கு அடுத்தடுத்த தேர்தலிலும் டெல்லியைக் கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி செய்த பஞ்சாப்பிலும் வெற்றி அடைந்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனி பெருபான்மையுடன் வெற்றி பெற்றதை
அடுத்து பல்லாவரம் அடுத்த பம்மலில் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநில குழு
உறுப்பினர் கந்தசாமி தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்தும்,
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.