சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக, 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் சில பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் கோடையிலும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு சில பகுதிகள் வழக்கத்திற்கு மாறாக கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது, மற்ற பகுதிகள் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியானின் புறநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் பெய்த கனமழைக்கு அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. மேலும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை நேற்றைய நிலவரத்தின்படி 21 ஆக உயர்ந்தது. 6 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல் போனவர்களைக் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. கனமழை காரணமாக கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அருகில் உள்ள சாலைகள், பாலங்கள், மின்விநியோகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் ஷான்சி நகரில் உள்ள ஆயுதமேந்திய காவல் படை பாதிக்கப்பட்ட பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்பியது. பாதிக்கப்பட்ட பகுதியில் முதற்கட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் அவசரகால மேலாண்மை அதிகாரிகள் மீட்புப் பணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.