வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நான்குமுனை சந்திப்பில் இயங்கிவரும் சிவவள்ளி விலாஸ் நகைக்கடையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததோடு, வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து அங்கு வருமான வரித்துறையின் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் சிவவள்ளி விலாஸ் நகைக்கடையின் மற்ற கிளைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதுச்சேரியிலும் பல்வேறு நகைக்கடை மற்றும் துணிக்கடைகள் மீதும் எழுந்த வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து 50க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் புதுச்சேரிக்கு விரைந்தனர்.
அங்குள்ள பல்வேறு நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிந்தபின் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.