முக்கியச் செய்திகள்உலகம்

தைவான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைபேவின் கிழக்கு பகுதியான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாகவும், சுமார் 35 கி.மீ. ஆழத்தில் பதிவானதாகவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய அமைப்பு தெரிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிலநடுக்கத்தை தொடர்ந்து தைபேவின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹுவாலியனில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். 1 மணி நேரத்திற்குள்ளாக 11 முறை நில-அதிர்வு உணரப்பட்டது.தைவானில் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தைவான் நாட்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவின.

இதையும் படியுங்கள் : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்.7-ல் ஆம் ஆத்மி கட்சி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

இந்த நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மேலும் 5 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர். மேலும், சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் : அரசிதழில் இன்றே வெளியீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுக- சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம்

Jayasheeba

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்; நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading