புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி லேவண்டர் நிற ஜெர்சியில் களமிறங்குகிறது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிளே ஆஃப் சுற்று நெருங்கி வரும் நிலையில், அதற்குள் நுழைவதற்காக அதிரடியான ஆட்டத்தை ஒவ்வொரு அணியும் வெளிப்படுத்தி வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி, நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து வரும் மே 15 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டியில் குஜராத் அணி வீரர்கள் அனைவரும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், லேவண்டர் நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளனர்.
லேவண்டர் கலர் ஜெர்சி அணிவதன்மூலம் புற்றுநோயினை அதன் முதற்கட்ட நிலையில் கண்டறிதல், அதனை தடுப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என குஜராத் டைட்டன்ஸ் அணி தெரிவித்துள்ளது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாவும் அந்த அணி தெரிவித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.