முக்கியச் செய்திகள்உலகம்

அடுத்த மாதம் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த மாதம் விண்வெளி பயணம் மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த தீபக், ஸ்லோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ் (58). அமெரிக்க கப்பல் படை விமானியான இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதன்முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இதனையடுத்து 2012-ம் ஆண்டில் இரண்டாம் முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர். அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் உருவாக்கிய ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்வெளி ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக மே 7-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதாக இருந்த இந்த ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்ல இருந்தார். இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2வது தனியார் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும் என கூறப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புல்ச் வில்மோர் ஆகியோர் பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்தது.

இந்நிலையில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டதால் ‘ஸ்டார்லைனர்’ விண்வெளி ஓடத்தை அடுத்த மாதம் 1-லிருந்து 5-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த விண்வெளி ஓடத்தை சுனிதா வில்லியம்ஸ் இயக்குவார். அவருடன் மற்றொரு நாசா விண்வெளி வீரர் பட்ச் வில்மோரும் விண்வெளி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி – போலீசார் குவிப்பு

EZHILARASAN D

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

EZHILARASAN D

சூரப்பாவிற்கு எதிரான விசாரணை ஆணையம்: நீட்டிப்பு கோர முடிவு!

Saravana

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading