முக்கியச் செய்திகள்இந்தியா

இந்தியாவில் அடுத்தடுத்து நில அதிர்வு – மேகாலயா, கார்கில் பகுதி மக்கள் அச்சம்!

மேகாலயாவில் இன்று 3.5 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்ட நிலையில், லடாக்கின் கார்கில் பகுதியிலும் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தின் கிழக்கு கரோ மலைப் பகுதியில் இன்று பிற்பகல் 2.37 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. இந்த நிலஅதிர்வானது 12 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : கின்னஸ் சாதனை படைத்த 88 வயதான ‘கேமர் தாத்தா’..!

இதனைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசமான லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று பிற்பகல் 2.42 மணியளவில் 3.8 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இதிலும் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. இந்தியாவில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

Jeba Arul Robinson

முகக்கவசம் அணியாவிட்டால் விமானத்தில் செல்ல தடை – அதிரடி நடவடிக்கை

Web Editor

ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்த ரோகித் ஷர்மா; வைரலாகும் வீடியோ!

Jeba Arul Robinson

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading