டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் நலமுடன் உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதவுள்ளது. இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆடு களத்தை விட, அணியாக ஒன்றிணைந்து விளையாடுவது தான் வெற்றியை பெற்று தரும் எனக்கூறினார். சூர்யகுமார் யாதவ்-ஐ அணியின் பின்புலமாக வைத்துள்ளதாகவும், அவரது ஆட்டத்திறன் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.







