எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த பொது மேலாளருக்கு நன்றி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு. வெங்கடேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரையில் இருந்து பழனி வழியாக கோயம்புத்தூர் வரை ஓடிக்கொண்டிருந்த பொதுப்பட்டிகளை கொண்ட ரயில் வண்டி கொரோனாவுக்கு பின்பு மதுரைக்கும் பழனிக்கும் இடையே ஒரு ரயிலாகவும் பழனிக்கும் கோயம்புத்தூருக்கும் இடையே இன்னொரு ரயிலாகவும் இயக்கப்பட்டு வந்தது.
இதனை ஒரே ரயிலாக இயக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 1 முதல் மதுரையில் இருந்து பழனி பொள்ளாச்சி வழியாக கோயம்புத்தூருக்கு ஒரே ரயிலாக இயக்க கால அட்டவணையும் உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. பொது மேலாளருக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
அதேபோல கோயம்புத்தூர் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர்கள் என்னிடம் அளித்த ஐந்து கோரிக்கைகளை ஆகஸ்ட் 18ஆம் தேதி பொது மேலாளருக்கு அனுப்பி வைத்தேன். அவர் அந்த கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலிக்க குறிப்பிட்ட துறையினருக்கு அனுப்பியுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் எனக்கு ஆகஸ்ட் 24 அன்றுபதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் நாம் எழுப்பி உள்ள கோரிக்கைகள்
1. திருச்செந்தூர் விரைவு வண்டியை கிணத்துக்கடவு கோயம்புத்தூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்க வேண்டும்
2. மதுரை கோயம்புத்தூர் இடையே ஓடிக் கொண்டிருந்த நகர இடை விரைவு வண்டியை அதிவிரைவு வண்டியாக உயர்த்தி தூத்துக்குடியில் இருந்து மீண்டும் இயக்க கோருகிறோம்
3. ராமேஸ்வரத்திற்கும் கோயம்புத்தூருக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த விரைவு வண்டியை மீண்டும் உடனே இயக்க கோருகிறோம்.
4. அதிகாலையில் ஓடிக்கொண்டிருந்த திண்டுக்கல்லுக்கும் கோயம்புத்தூருக்குமான பழனி வழியாக ஓடிக்கொண்டிருந்த பயணி வண்டியை மீண்டும் இயக்க வேண்டும்
5. திருநெல்வேலிக்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே வாரம் ஒரு முறை இயக்கப்படும் தென்காசி கோயம்புத்தூர் வழியான விரைவு வண்டியை நிரந்தர வண்டி ஆக்கி வாரத்தின் அதிக நாட்கள் ஓடும் படி அமல்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை பொது மேலாளர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கருத்துக்களையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இயக்கிட வேண்டும் என்றும் அதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன் இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.