ஸ்ரேயாஷ் ஐயரை கேப்டனாக நியமித்தது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
15வது ஐ.பி.எல் போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் குஜராத் டைட்டனஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வீரர்களின் ஏலம் நடைபெற்ற நிலையில் மொத்தம் 204 வீர்ரகள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கடந்த ஆண்டு டெல்லி அணி கேப்டனாக இருந்த இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை இந்தாண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும், அணியில் ரஸ்ஸெல், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, கம்மின்ஸ், ரகானே, டிம் சவுதி, உமேஷ் யாதவ் உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.
அண்மைச் செய்தி: 45வது சென்னை புத்தக காட்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஐபிஎல் 2022 சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தப் போகும் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, புதிய கேப்டனாக ஸ்ரேயாஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், இணையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயோன் மோர்கன் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஷ் ஐயர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.