தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் வெடிவிபத்துக்குள்ளான சுரங்கத்துக்குள் இன்னும் ஏராளமானவா்கள் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் நிலையில், அந்தப் பகுதியில் அசைவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ஃப்ரீ ஸ்டேட் மாகாணம், வெல்காம் நகரில் உள்ள தங்கச் சுரங்கத்தில் கனிம வளங்கள் தீா்ந்துவிட்டதால் கடந்த 1990-ம் ஆண்டு அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அந்த சுரங்கத்துக்குள் இருக்கக் கூடிய படிமங்களை சட்டவிரோதமாக சிலா் கடந்த மாதம் 18-ம் தேதி தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதையடுத்து, அங்கு சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த 16 போ் போலீஸாரிடம் சரணடைந்தனா். மேலும், வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரது உடல்களையும் அவா்கள் மீட்டு வந்தனா். ஆனால் மாயமானவா்களின் குடும்பத்தினா் அளித்த விவரங்களின் அடிப்படையில், அந்த சுரங்கத்துக்குள் இன்னும் ஏராளமானவா்கள் சிக்கி உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “கடந்த மாதம் விபத்தில் சிக்கிய வா்ஜீனியா சுரங்கத்திலிருந்து 2 பேரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 29 போ் அந்த சுரங்கத்துக்குள் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுரங்கத்துக்குள் அசைவுகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு மேலும் பலா் சிக்கியிருக்கக் கூடும் எனவும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. ஆனால் சுரங்கத்துக்குள் செல்வது மிகவும் அபாயகரமானது என்பதால் அங்கு மீட்புக் குழுவினரை அனுப்ப முடியாத நிலை உள்ளது” இவ்வாறு அவர்கள் கூறினா்.