விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி அவரது முடிவு குறித்து ட்வீட் ஒன்றை பதவிட்டுள்ளார்.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய டி 20 போட்டியிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். பின்னர், ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். டெஸ்ட் அணிக்கு மட்டும் அவர் கேப்டன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அணிக்கு தலைமையேற்க தகுதியானவர் என நம்பிக்கை வைத்த தோனிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியதுடன் அணியை சிறப்பாக வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பயணித்த அனைத்து வீரர்களுக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பு குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி 20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட முடிவாகும். அந்த முடிவை பிசிசிஐ மதிக்கிறது. எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும். அவர் ஒரு சிறந்த வீரர் என அவர் தெரிவித்துள்ளார்.