‘மாநாடு’ திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியாக நடித்துள்ள படம், ’மாநாடு’. பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன், பிரேம்ஜி, கருணாகரன் உட்பட பலர் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கடந்த தீபாவளி அன்று வெளியாவதாக அறிவிக்கப் பட்டு இருந்த இந்தப் படம், பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிம்பு, முதலில் கலகலப்பாக பேசினார். அப்போது, ஒவ்வொரு முறையும் நானும் வெங்கட்பிரபுவும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று பேசுவோம். ஆனால் வேறு ஒருவரை வைத்து படம் பண்ணிவிடுவார்.
இந்தப் படத்திற்கு ஒன்லைன் மட்டும்தான் சொன்னார். பிடித்திருந்தது. கண்டிப்பாக பண்ணலாம் என்றேன். இந்தப் படத்துக்காக நாங்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறோம். மொத்த கலைஞர்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றார். பிறகு திடீரென்று மேடையிலேயே கண்கலங்கினார். தமது ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் தொடர்ந்து பிரச்னைகள் கொடுப்பதாகவும் ரசிகர்களாகிய நீங்கள்தான் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி கண்ணீர் விட்டார்.