மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க மருத்துவமனை முதல்வர்கள், இயக்குனர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களுக்கு பாலியல் சீண்டல்களை கொடுத்த இரண்டு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதோடு, பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏதேனும் உள்ளதா என மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகளில் முதல்வர்களும், இயக்குனர்களும் நேரடியாக சென்று, தனித்தனே விசாரித்து, ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மருத்துவமனை, மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இயக்குனர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரொனா பணிக்காக தனியார் விடுதிகளில் தங்கியுள்ள பெண் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ஏதேனும் தொந்தரவு உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.








