தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயலானது, அதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், கடந்த 19 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 18 ஆம் தேதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் ஒரு நாள் தாமதமாக 19ஆம் தேதி உருவானது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று தென் மேற்கு அரபிக் கடலில் புயலாக தீவிரம் அடைந்தது. இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இந்தியாதான் வைத்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு11.30 மணிக்கு தேஜ் புயல், அதி தீவிர புயலாக மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.