32.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடல் சீற்றம்: ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

கடல்சீற்றம் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், 5-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர்.

சூறைக்காற்று காரணமாக மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல
வேண்டாம் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அறிவித்தையடுத்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 5வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் ராமேஸ்வரம்மீன் பிடி துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்
நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ராமேஸ்வரம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில்
சூறைக் காற்று வீசக்கூடும் என்பதனால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீனவர்கள்
மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் வழங்கும் மீன்பிடி அனுமதி
சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்
மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மறு உத்தரவு வரும் வரை நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டடுள்ளதால், இதனால் சங்குமால், தனுஸ்கோடி, ஓலைக்குடா பகுதியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள 800க்கும் அதிகமான விசைப்படகுகளும் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மீன்பிடி தடையால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்
நேரடியாகவும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்கள்
மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். அரசுக்கு அதிக அந்நிய செலாவணியை ஈட்டுதரக்கூடிய மீன்பிடித்தொழில் நடைபெறாததால்; சுமார் ஒரு கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் மீன் பிடி செல்லும் நேரங்களில் தமிழக அரசு தடை விதிப்பதால் மீனவர்களின் வாழ்வாதமாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நாட்களில்; மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கபட்டுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading