33.5 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தேசதுரோக வழக்கு பதியவேண்டும்: எஸ்டிபிஐ

நபிகளை பற்றி தவறாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர்
நுபுர் ஷர்மா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என  எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை மண்ணடியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் நடப்பு அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டு அது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில செயலாளர் நெல்லை முபாரக், இறை தூதர் நபிகள் நாயகம்  பற்றி அவதூறாக பேசியதாக பாஜக செய்தி தொடர்பாளர்களான
நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நுபுர் ஷர்மாவையும், நவீன் ஜிண்டாலையும், பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்தது மட்டும் போதாது என்று கூறிய நெல்லை முபாரக், இருவர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.  மத்திய அரசின் மீது எதிர்கருத்து தெரிவிப்பவர்களைக்கூட, சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யும் பாஜக அரசு, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மாவையும், நவீன் ஜிண்டாலையும்  தேசவிரோத வழக்கில் ஏன் கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

வெறுப்பு அரசியலை மட்டுமே தனது முதலீடாக கொண்டு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நெல்லை முபாரக் சாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading