சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணி நேர பட்டினி போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே 38 மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் தேர்தல் வாக்குறுதியான வரிசை எண் 313 அளித்த தேர்தல் வாக்குறுதிகளான கால முறை ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல், பணிக்கொடை வழங்குதல் மற்றும் காலை உணவு திட்டத்தை பள்ளி சத்துணவு திட்டத்துடன் இணைத்து அதனை சத்துணவு ஊழியர்களிடம் வழங்குதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
பட்டினிப் போராட்டத்தில் 38 மாவட்டங்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த பட்டினி போராட்டம் என்பது 29ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்