32.2 C
Chennai
May 20, 2024
தமிழகம் செய்திகள்

தொடர்ந்து பெயர்ந்து விழும் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பூச்சு! அதிர்ச்சியில் கிராம மக்கள்!

சாத்தான்குளம் அருகே அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு தொடர்ந்து பெயர்ந்து விழுவதால் குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளை கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடியில் தினந்தோறும் 25-க்கு மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்ற  நிலையில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.

உடனடியாக இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையில், சுவர் ஓரங்களில் குழந்தைகளை அமர வைத்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கருதி, அருகில் கால்நடை மருத்துவமனையாக செயல்பட்டு வந்த கட்டிடத்தில் தற்போது அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்து மாணவச் செல்வங்களின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

—–கா. ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading