லியோ பட பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய்க்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் . இவர் பல விதமான பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக ஆர்டிஐ செல்வம் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்தார். மேலும் நீதிமன்றம் மூலமாக மனு அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரில் நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை ஆதரிக்கும் வகையில் பாடலை இயக்கிய நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பாடல் தற்போது வைரலாகி போதைப்பொருள் பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர் மத்தியில் தூண்டுதலாக அமைந்திருப்பதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜயின் பனையூர் முகவரி மற்றும் சாலிகிராமம் முகவரிக்கும் ஆர்.டி.ஐ.செல்வம் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸில் போதைப்பழக்கம், ரவுடிசத்தையும் ஊக்குவிக்கும் விதமாக நா ரெடிதான் பாடல் உள்ளதாகவும். இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவரிடம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலாமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியதால் நடிகர் விஜயின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆர்.டி.ஐ. செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார். கொலை மிரட்டல் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் ஆர்.டி.ஐ. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.