சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான முதல் அரையிறுதி போட்டியில், ஐதராபாத் அணியை வென்று தமிழ்நாடு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நடந்துவரும் இந்த தொடரில், டெல்லியில் இன்று அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு -ஐதராபாத் அணிகள் மோதி . டாஸ் வென்ற தமிழ்நாட்டு அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி ஐதராபாத் அணியின் கேப்டன் தன்மே அகர்வாலும் விக்கெட் கீப்பர் பிரக்னய் ரெட்டியும் களமிறங்கினர். தமிழ்நாட்டு அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் திணறினர். தனய் தியாகராஜன் தவிர மற்ற யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. தனய் அதிகப்பட்சமாக 25 ரன்கள் எடுத்தார். அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 90 ரன்களுக்குள் சுருண்டது.
தமிழ்நாட்டு அணியில், பி. சரவண குமார் 5 விக்கெட்டுகளை அள்ளினார். முருகன் அஸ்வின், முகமது தலா 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய தமிழ்நாட்டு அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. சாய் சுதர்சன் 34 ரன்களுடனும் கேப்டன் விஜய் சங்கர் 43 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு அரையிறுதிப் போட்டி கர்நாடகா மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையே நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணியுடன் தமிழ்நாடு அணி இறுதிப் போட்டியில் மோதும்.