முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

2024 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள்: லோகேஷ் ரகுராமன், யூமா வாசுகிக்கு அறிவிப்பு!

2024ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு,  புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.  இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்),  சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

தமிழ் மொழியில் “விஷ்ணு வேந்தர்” என்ற சிறுகதை தொகுப்பிற்காக *லோகேஷ் ரகுராமனுக்கு* 2024ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்,  பெங்காலி, ஆங்கிலம்,அசாமி, குஜராத்தி, இந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கனி, மைத்திலி, மலையாளம், ராஜஸ்தானி, உருது, தெலுங்கு, உள்ளிட்ட 23 மொழிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  சமஸ்கிருத மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல “யுமா வாசுகி” எழுதிய *தன்வியின் பிறந்த நாள் என்ற கதை தொகுப்பிற்காக *தமிழ் மொழிக்கான பால சாகித்ய புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

காயல்பட்டிணத்தில் கே.பி.எல் கால்பந்து போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்

Web Editor

சென்னையில் மழை, வெள்ளப் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் வெளியீடு

Halley Karthik

ஞானதேசிகன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

Jeba Arul Robinson

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading