15வது ஐபிஎல்-ன் இன்றைய, 18-வது போட்டியில்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
15-வது ஐபிஎல்-ன் 18-வது போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களம்கண்டன.
இதற்கு முன்பு, மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது. அதில் 10 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது, அதில் 23 ரன்கள் வித்தியாசத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதேபோல, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களம்கண்டன, இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதேபோல, இதற்குமுன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது அதில் 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதனைத்தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது அதில் 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதில் 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 151 ரன்களை எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக அமைந்தது.
அதனைத்தொடர்ந்து போட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.3 ஓவர் முடிவில், 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.







