சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற விழாவில், திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், வேருக்கு விழா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், 1300 பேருக்கு பொற்கிழிகள் வழங்கும், வாய்ப்பை தேடித் தந்த அமைச்சர் சேகர் பாபுக்கு நன்றி என தெரிவித்தார். மேலும், கலைஞர் பிறந்த நாளை சேகர் பாபு ஒரு நாள் அல்ல, 30 நாள் அல்ல, 40 நாள் அல்ல, அடுத்த ஆண்டுவரை கூட கொண்டாடுவார் என பாராட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் மடும்மல்ல, என்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடி இயக்கத்திற்கு வலு சேர்ப்பவர்தான் அமைச்சர் சேகர்பாபு எனவும், கழகத்திற்கு வேறாக இருக்க கூடிய உங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகதான் பொற்கிழிகள் விருது நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறினார்.
அண்மைச் செய்தி: ‘பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி’
தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற நிகழ்ச்சி சென்னையில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் நடைபெறும் என தெரிவித்த முதலமைச்சர், தற்போது கை ரிக்சா தமிழ்நாட்டில் இல்லை இதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் என குறிப்பிட்டார். அதேபோல, பிச்சைக்காரத்களுக்கு மறுவாழ்வு, தொழு நோயாளிகளுக்கு வாழ்வு அளிக்கும் விதமாக மறுவாழ்வு மையத்தை அமைத்தவர் கருணாநிதி என தெரிவித்தார்.
ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்கவைத்தவர் கருணாநிதி என குறிப்பிட்ட அவர், 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் திமுக எனவும், 8 ஆண்டுக்கு பிறகு தான் 1957-ல் தேர்தல் களத்தை சந்தித்து சட்டமன்றத்திற்கு சென்றோம் என குறிப்பிட்ட அவர், 1962 எதிர்கட்சி ஆனோம், 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு அண்ணாவின் மறைவுக்கு பின் கருணாநிதி முதலமைச்சராக பொறுபேற்றார் என கூறினார். மேலும், நெருக்கடியின் போது ஆட்சி கலைக்கப்பட்டது எனவும், 1989 ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடித்தோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ளோம் என நினைவுகூர்ந்த அவர் இத்தனைக்கும் காரணம் திமுகவின் முன்னோடிகளான நீங்கள் தான் என தெரிவித்தார். மேலும், வேர் என்பது கண்ணுக்கு தெரியாது. ஆனால், மரத்திற்கு உறுதுணையே வேர் தான் என குறிப்பிட்ட அவர், உங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏற்படுத்திய நிகழ்ச்சி தான் இந்த பொற்கிழிகள் வழங்கும் நிகழ்ச்சி என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.