உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்கள், அதன் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் வழியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக போலந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் – போலந்து இடையே உள்ள இரண்டு எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடந்து வருபவர்கள், ஷெஷினி – மெடிகா எல்லை வழியாகவும், சொந்த வாகனங்களில் வருபவர்கள் க்ரகோவிச் எல்லை வழியாகவும் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள இந்திய தூதரகம், இரண்டு எல்லைகளிலும் இந்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஷெஷினி – மெடிகா எல்லையில் பணியில் உள்ள பங்கஜ் கர்க் என்னும் அதிகாரியையும், (+48660460815 என்ற எண்ணிலும்), க்ரகோவிச் எல்லையில் பணியில் உள்ள சுபம் குமார் என்னும் அதிகாரியையும் (+48881551271) தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
அதோடு, இந்த எல்லைகள் வழியாக வரும் இந்தியர்கள், கூகுளில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அளிப்பவர்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தூதரகம் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், உக்ரைனின் அண்டை நாடுகளான ரொமானியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் வழியாகவும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.