சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளை கரைகளில் ஏற்றி பழுதுபார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காவும், மீன்வளத்தை காத்திடவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் விசை படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலிலிருப்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனையடுத்து கன்னியாகுமாரி மாவட்டம், சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தடைகாலம் என்பதால் மீன்வார்கள் தங்களது விசைப்படகுகளை கரைகளில் ஏற்றி பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு விதித்துள்ள மீன்பிடி தடை காலத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கேரளா, கர்நாடக பகுதிகளிலிருந்து ஏராளமான விசைப்படகுகள் மீன் பிடிப்பதால் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் என்பது முற்றிலும் தடைபவதால் அது தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் அதனால், அண்டை மாநில விசைப்படகுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.8000 ஆக தர வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
—-அனகா காளமேகன்







