முக்கியச் செய்திகள்தமிழகம்

மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா சடலமாக மீட்பு

10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கி தப்பிய சித்தப்பா சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஒரு கிராமத்தில் கடந்த 10ம் தேதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி 7மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் சித்தப்பா சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கியுள்ளார் என தெரியவந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சித்தப்பாவை போலீசார் தேடி வந்த நிலையில் அக்கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் குளக்கரையில் தூக்கில் தொங்கியபடி இருந்த செந்தில் சடலத்தை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.

தனது அண்ணன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து உயிரிழப்பு க்கு தூண்டி தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தொழிலாளர் உரிமையை மீட்டெடுத்தவர் அம்பேத்கர்- திருமாவளவன்

EZHILARASAN D

இலங்கை நிலவரம்–அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசு விளக்கம்

Mohan Dass

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்! காவல்துறை தகவல்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading