தொடங்கியது ஐபிஎல் 2021; ஆர்சிபி பந்து வீச்சு..

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 14வது ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம்…

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 14வது ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் நடப்பு சேம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.