முக்கியச் செய்திகள்தமிழகம்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுன்னர்.

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.  இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் காலை (22.06.2024) வழக்கம் போல் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகில்  மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.  அதன்படி மீனவர்கள் மீன்பிடித்து விட்டு அதிகாலை 2 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரைக் கைது செய்தனர்.

3 விசைப்படகையும் அவர்கள் கைப்பற்றினர்.  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இலங்கை கடற்படையினர் 22 மீனவர்களையும் கைது செய்து, காங்கேஷன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.  பின்னர் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.   அப்போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் மற்றும் 3  விசைப்படகுகளுடன்,  2018ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுதலை செய்ய மத்திய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் பெரிய ரக விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   இதன்காரணமாக மீன்பிடி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.  மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி மற்றும் மீன்பிடி சார்பு தொழிலை நம்பி சுமார் 5,000 மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஆதார் கட்டாயமா? – தேர்தல் ஆணையம்

G SaravanaKumar

“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Jeba Arul Robinson

திருமங்கலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading