பருவமழையை முன்னிட்டு மக்கள் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் குறித்த விபரங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்யும் முறையை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்துகிறது.
நெருங்கி வரும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைநீர் வடிகால் அமைத்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் உட்பட பல பணிகள் மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பொதுமக்கள், தங்கள் வசிப்பிடங்களில் மழைநீர் முறையாக வெளியேறாமல் தேங்கியிருந்தால், https://nellaineervalam.in/waterlogging/ என்ற இணையதளம் வழியாக பொதுமக்களே நேரடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்களை தெரிவிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட சுமார் 1200 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன என்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.