ஆஸ்திரேலிய டாலர் நோட்டில் இனி ராணி எலிசபெத்தின் படம் இடம்பெறாது!

ஆஸ்திரேலிய நாட்டின் 5 டாலர் நோட்டில் இடம்பெற்றிருந்த மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் உருவப் படத்தை நீக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பையடுத்து, அந்நாட்டின்…

ஆஸ்திரேலிய நாட்டின் 5 டாலர் நோட்டில் இடம்பெற்றிருந்த மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் உருவப் படத்தை நீக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பையடுத்து, அந்நாட்டின் 5 டாலர் நோட்டில் இடம்பெற்றிருந்த எலிசபெத்தின் உருவப் படத்தை நீக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாலர் நோட்டின் ஒருபக்கத்தில் பழங்குடியினர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான படம் இடம்பெறும் என்றும், மற்றொரு புறம்  ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் படம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 டாலர் நோட்டை வடிவமைப்பதில் அந்நாட்டின் பழங்குடியின தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல, புதிய நோட்டை வடிவமைத்து அச்சிட பல ஆண்டுகள் ஆகும். எனவே,  அதுவரை தற்போதுள்ள நோட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

-ம.பவித்ரா

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.