புதுக்கோட்டை அருகே பொன்னமராவதி பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாண்டுகளாக பாரம்பரியமாக மீன் பிடித் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.கோவில் திருவிழாக்களையொட்டியும்,அறுவடை காலத்திற்கு பின்னரும் இந்த மீன் பிடித்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை முடிந்த பின்னர் கண்மாயில் நீர் சிறிது சிறிதாக குறைய தொடங்கும். எனவே வரும் ஆண்டும் உரிய வகையில் மழை பெய்ய வேண்டியும், விவசாய பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டியும் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இத்திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி பொன்னமராவதி அருகேயுள்ள கருப்புக்குடிபட்டியில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த எராளமான பொதுமக்கள் பங்கேற்று மீன் பிடி உபகரணங்களான ஊத்தா, பரி, தூரி உள்ளிட்டவற்றை கொண்டு மீன்களை பிடித்து சென்றனர். மக்களின் கைகளில் நாட்டு மீன்களான கெண்டை, அயிரை, கட்லா உள்ளிட்டவை சிக்கின.அவற்றை மக்கள் மகிழ்ச்சி பொங்க வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.