31.9 C
Chennai
June 1, 2024
செய்திகள்

சென்னை, கோவையில் சொத்து வரி உயர்வு – எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது. 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த, அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி, மாற்றியமைக்கப்பட்டதற்கு காரணங்கள் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி,  சொத்துவரி உயர்த்துவது தொடர்பான அரசாணையையும், மாநகராட்சி தீர்மானங்களையும் செல்லும் என தீர்ப்பளித்தார்.  மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading