“என்னைப் பார்த்து பிரதமர் மோடியே ஆச்சரியப்பட்டார்” – துரைமுருகன் நெகிழ்ச்சி!

பிரதமர் மோடி என்னுடைய அரசியல் அனுபவங்களைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதம் அடைந்த வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட மேல்பாடியில் ரூ.12.94 கோடியில்…

பிரதமர் மோடி என்னுடைய அரசியல் அனுபவங்களைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதம் அடைந்த வேலூர்
மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட மேல்பாடியில் ரூ.12.94 கோடியில் தரைப்பாலம், ரூ.19.50 கோடியில்  புதிய அணை பணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த நிதிநிலை அறிக்கையிலேயே காட்பாடிக்கு சிப்காட் வந்துவிடும். அதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அதே போல் காங்கேயநல்லூர்- சத்துவாச்சாரி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.100 கோடி நிதி 2 நாட்களுக்கு முன்பு தான் ஒதுக்கப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

ஒரு நாள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நான் சந்தித்துப் பேசும் அவர்
என்னிடம் கேட்டார், நீங்க தானே திமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவையில் எவ்வளவோ நாளாக இருக்கீங்க என கேட்டார். அதற்கு நான் 54 ஆண்டு என்றதும் “What 54 Years” என ஆச்சரியப்பட்டு. ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் அதற்கு, இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை என கூறினார் பிரதமர் மோடி.

12 முறை போட்டியிட்டவர் கேரள முதல்வர் உம்மண்சண்டி. இதற்குக் காரணம் காட்பாடி
தொகுதியையும், மக்களையும் எனது கோயிலாக, தாயாக பார்க்கிறேன். தமிழகத்திலேயே 2 ஆண்டில் அதிக பணிகளை செய்தது காட்பாடி தொகுதி தான்.

தற்போது பொன்னை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் உள்ள சிவன் கோயில், அரிஞ்சய சோழன் மேல்பாடி போரில் இறந்ததன் நினைவால், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோயிலைப் பற்றி நான் பேசி பேசி அதிகமானோர் வருகை தருகிறார்கள்.

இந்த கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தக் கோரிக்கை வைக்கிறார்கள். இது மாநில
அரசிடம் இருந்தால் உடனடியாக செய்திருப்போம். ஆனால் இது மத்திய அரசின்
கட்டுப்பாட்டில் உள்ளதால் அதன் அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம்
நடத்தப்படும்.

பெண்கள் எதிர்பார்க்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் வரும். தேர்தலுக்கு முன் அந்த பாக்கியைக் கொடுத்துவிடுவோம். தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் போது பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என பேசினார் அமைச்சர் துரைமுருகன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.