ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தார். மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இந்திய மக்கள் சார்பில் அவர் அஞ்சலி செலுத்தினார்.
இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து 13-ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராணியின் உடலை மன்னர் சார்லசும், கமிலாவும் பெற்று கொண்டனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
நாளை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகத் தலைவர்கள் பலரும் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளனர்.
நமது நாட்டின் சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்றார்.

நாள்தோறும் ஏராளமானோர் குவிந்து ராணி எல்சபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்று இரவு விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.







