ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 55ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!…

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்குப் பகுதியில் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை…

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் மேற்குப் பகுதியில் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 10-க்கும் அதிக முறைஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்திய தூதரகத்தின் உதவி எண் அறிவிப்பு! நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஷிகாவா மற்றும் நிகாட்டா ஆகிய மாகாணங்களை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் இடித்து விழுந்தன. இந்நிலையில், பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.